ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க 134 பேர் அன்று வாக்களித்திருந்தனர். அவர்களில் 115 பேர் இப்போது ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக்க ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதன்படி பார்க்கின்ற போது மொட்டுக் கட்சியில் பெரும்பான்மையை ஜனாதிபதி ரணில் கைப்பற்றி இருக்கின்றார்.
இப்போது 20 பேர்தான் ராஜபக்ஸாக்களுடன் இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. ஆனால் மேற்சொன்ன 134 பேரில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் ஏற்கெனவே அரசிலிருந்து வெளியேறி விட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.