கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது ரணில் தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சஜித்-நாமல் இடையே ஒரு இரகசிய சந்திப்பு நடந்திருக்கின்றது. இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது ரொனாட் சில்வா. பாரத லக்ஷ;மன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் துமிந்த சில்வாவின் அண்ணன்.
அன்று ராஜபக்ஸாக்களுக்காக தனது ஊடகத்தின் மூலம் பரப்புரை செய்து வந்த அவரது ஊடகம் இன்று முழுக்க முழுக்க சஜித் ஆதரவாக செயல்பட்டு வருகின்றது. இது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தாம் ஜனாதிபதியாக் கொண்டு வந்த ரணில் இன்று தமக்கு விரோதமாக செயலாற்றி வருவதால் ரணிலைப் பலிவாங்கும் ஒரு வேலைத் திட்டத்துக்கான ஏற்பாடாகக் கூட இந்த சந்திப்பு இருக்கலாம்.
பொது மக்கள் மத்தியில் ராஜபக்ஸ விரோ அலை காரணமாக சஜித்துக்கும் அணுரவுக்கும் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இப்படியான ஒரு சந்திப்பு நடந்திருப்பது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
தேர்தலுக்கு பின்னர் சஜித்தும் ராஜபக்ஸாக்களும் இணைவார்கள் என்று நாம் நெடுநாளகவே சொல்லி வருகின்றோம். ஆனால் தேர்தலுக்கு முன்னரே இந்த இரகசிய சந்திப்பு நடந்திருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நன்றி கார்டியன் நியூஸ் 31.07.2024