–நஜீப்–
இது தொலைபேசிப் பக்கம் இருந்து வரும் ஒரு செய்தி. சஜித் அணியில் தொடர்ந்தும் சலசலப்புக்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அது அவர்களுக்குப் பழகியும் போய் விட்டது. இது சற்று வித்தியாசமான சலசலப்பு.
தனித்துவ அரசியல் செய்யும் ஒரு முஸ்லிம் தலைவரும் மலையகத் தலைவர் ஒருவரும் சஜித் கூட்டணயில் இருந்து ஒதுங்கி, வருகின்ற தேர்தலில் யானையில் ஏறிப் பயணிக்கலாமா அல்லது அணுர குமார தரப்புக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க அமைக்கின்ற செங் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கின்ற தரப்புடன் இணையலாம என்று இந்த இருவரும் கூட்டாக முடிவு எடுக்க இருப்பதாக ஒரு தகவல்.
சஜித் அணிக்கு பயத்தை உண்டு பண்ணி மேலும் சில சலுகைகளைப் பிடுங்க இவர்கள் போடுக்கின்ற ஒரு அரசியல் வியூகமாகத்தான் இது இருக்க வேண்டும் என்பது நமது கணக்கு! இதற்கு சமூக உரிமைக்கான பேரம் -குரல் என்று கூட பிறப்புச் சன்றிதழ் வரக் கூடும்.
என்னதான் இருந்தாலும் வித்தை களத்தில்தானே நடக்க வேண்டும். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி: 02.05.2024 ஞாயிறு தினக்குரல்