-நஜீப்-
அணுராவை விவாதத்துக்கு அழைத்த சஜித்தின் சாகாக்கள் இப்போது சஜித்துடன் மட்டும் விவாதித்தால் போதாது எங்களையும் சேர்த்துக் கொண்டுதான் அந்த விவதம் நடக்க வேண்டும். அப்படியானால்தான் சஜித்தும் நாங்களும் விவாதத்துக்கு வருவோம் என்று நிபந்தனை விதித்ருக்கின்றார்கள்.
ஆனால் அணுரா தரப்பினர் தமது தலைவர் விவாதத்துக்குத் தயார் என்று நான்கு திகதிகள் குறித்து அதில் சஜித்துக்கு வசதியான நாளையும் நேரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு எழுத்து மூலம் கேட்டிருக்கின்றனர். ஜேவிபி. முக்கியஸ்தரான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு இதற்கான கடிதத்தையும் உத்தியோகபூர்வமாக அனுப்பி இருக்கின்றார்.
இதனால் நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்ற சஜித், ஹம்பாந்தோடைடையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பேசும் பேது நண்பர்களே நான் விவாதத்துக்குத் தயார் என விளித்துப் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. மேற்சொன்ன நிபந்தனைகளை ரணில் சகாக்கள் விதிருப்பதால் இந்த விவாதம் ஒரு பகல் கனவு என்றுதான் தெரிகின்றது.
நன்றி: 28.04.2024 ஞாயிறு தினக்குரல்