இரட்டை வேட ராஜாக்கள்!

-நஜீப்

2019ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று அதில் மிகப் பெரிய வெற்றியை கோட்டா பெற்ற போதும் தனக்கு நாடாளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால்தான் சிறப்பான ஒரு மக்கள் நல ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும் என்று சொல்லித்தான் மொட்டு அந்த இலக்கையும் பெற்றுக் கொண்டது.

ஆனால் இப்போது யாருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்து விடாதீர்கள் அது மிகப் பெரிய ஒரு ஆபத்தான நடவடிக்கையாக அமையும். இப்படிப் பேசுகின்றவர்கள் வேறு யாரும் அல்ல அதே ராஜபக்ஸாக்கள்தான்.

அவர்கள் ஏன் இப்படி பல்டி அடிக்கின்றார்கள் என்பதனை குடி மக்கள் சிந்திக்க வேண்டும். நிச்சயமாக நமக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை இதனால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வைத்தால் அதில் தோல்வி. அந்த தோல்வியுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போனால் வெற்றி பெறுவோருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிடைத்து விடும் என்று அவர்கள் அஞ்சுவதால்தான் இப்படி பல்டியடித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதிலிருந்தே வரும் தேர்தலில் ராஜபக்ஸாக்கள் தோல்வியை பகிரங்கமாக ஒத்துக் கொள்கின்றார்கள் என்று எடுத்தக் கொள்ள முடியும்.

நன்றி: 31.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பரபரப்பான ஏப்ரல் மாதம்!

Next Story

கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும்