-நஜீப் பின் கபூர்-
முஸ்லிம் சமூகத்தினரின் அரசியல் உணர்வுகள் தொடர்பான கணிப்பு!
400 பேரிடம் ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் (SRI LANKA GUARDIAN NEWS) இணையத் தளம் மூலம் நடத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினரின் அரசியல் உணர்வுகள் தொடர்பான கருத்துக் கணிப்பீட்டின்படி ஜனாதிபதித் தேர்தலில் அவர்களின் உணர்வு இப்படி அமைந்து காணப்படுகின்றது.
மொட்டு 2 %
ரணில் 8 %
அனுர 12 %
வாக்களிக்க மாட்டோம் 14 %
சஜீத் 28 %
இன்னும் தீர்மானம் இல்லை 36 %
மொத்தம் 100 %
பொதுவான கருத்துக் கணிப்பு
அனைத்து சமூகங்களையும் மையப்படுத்தி ஒரு கருத்துக் கணிப்பு இது. பொது தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் அதன் முடிவுகள் பின்வருமாறு அமையும் என இந்தக் கருத்துக் கணிப்புக்களில் இருந்து தெரிய வருகின்றது.
அணிகள் % ஆசனங்கள்
ஐ.தே.க (UNP) 03 % 03 -06 வரை
இதர (OTH) 07 % 22 – 27 வரை
மொட்டு(SLPP) 19 % 39 -44 வரை
ஐ.ம.ச.(SJP ) 30 % 58 – 63 வரை
தே.ம.ச (NPP) 41 % 89 -94 வரை
ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்று நமது கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கின்றன. அதே நேரம் ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தால் அதன் பெறுபேருகள் பின்வமாறு அமையும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
அனுரகுமாரா 41 முதல் 43%
சஜித் பிரேமதாச 33 முதல் 35%
மொட்டு தரப்புக்கு 18 முதல் 21%
இதர தரப்பினர் 06 முதல் 08%
என்று அந்தக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பொதுவாக 12 சதவீதமானவர்கள் நாம் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் அப்படிச் சொல்கின்றவர்களில் பத்து சதவீதமானவர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது நமது கருத்து.
அதே போன்று நாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று 32 சதவீதமானவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வாக்களிக்க மாட்டோம் என்று கூறுபவர்களும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று சொல்பவர்களும் வெளிப்படையாக தமது கருத்தை தெரிவிக்க விரும்பாதவர்கள். அல்லது அச்சம் காரணமாக அப்படி அவர்கள் கூறுகின்றார்கள்.
வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லும் 12 சதவீதமானவர்களையும் தீர்மானம் எடுக்கவில்லை என்று கூறும் 32 சதவீதமானவர்களையும் சேர்த்தால் இந்த தொகை 44 சதவீதமாக இருக்கின்றது. எனவே இந்தப் பெரும்பாலான தொகையினரை வலைத்துப் பிடிக்கின்ற போது மேற்சொன்ன நமது கருத்துக் கணிப்புக்களில் கணிசமான மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது என்பதனையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
அத்துடன் தேர்தல் நெருங்கும் போது நிகழ்கின்ற சம்பவங்களும் இதில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். ஆனால் தற்போதைய நிலை இதுதான்
http://www.srilankaguardiannews.com