-நஜீப்-
நாம் எமது கட்டுரைகளில் அடிக்கடி உதயங்க வீரதுங்க தரும் தகவல்கள் பற்றிப் பேசி வருகின்றோம். காரணம் அவர் உத்தியோகப் பற்றற்ற ராஜபகஸாக்கள் பேச்சாளர் என்பதுதான் எமது கணிப்பு. இப்போது வருகின்ற தேர்தல்கள் தொடர்பான கணிப்புக்கைள் பல்வேறு மட்டங்களில் நடாத்தப்பட்டு வருவது தெரிந்ததே.
நாம் அறிந்த வகையில் எதையும் வெளிப்படையாகப் பேசுகின்ற உதயங்க இதனால் பல முறை தமது சகோதரர்காளான மஹிந்த கோட்ட பசில் பேன்றவர்களிடத்தில் திட்டு வாங்கி இருப்பதும் நமக்குத் தெரியும். இப்போது வருகின்ற பொதுத் தேர்தலில் அனுர தரப்பினர் நாற்பது இலட்சம் (40) வரை வாக்குகளைப் பெறுவார்கள் என்று அவர் ஒரு ஊடகச் சந்திப்பில் சொல்லி இருக்கின்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி அறுபத்தி எட்டு இலட்சம் (68) வாக்குளைப் பெற்றுக் கொண்டது. சஜித் தரப்புக்கு இருபத்தி ஏழு இலட்சம் (27) வாக்குகள். உதயங்க இந்தக் கணக்குப்படி தேர்தல் களத்தில் ஆளும் தரப்பினருக்கும் எதிர் அணிக்கும் ஜேவிபி கடும் சவலாக இருக்கப் போகின்றார்கள் என்பது தெளிவு.
நன்றி: 17.03.2024 ஞாயிறு தினக்குரல்