-நஜீப்-
இன்று சமூக ஊடகங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அனைவரும் போல ஒட்டு மொத்தமாக ஜேவிபி. காசு கொடுக்கின்றது. இப்படி ஹிருனிக்க பிரேமச்சந்திர சஜித் மேடைகளில் பேசி வருகின்றார். ஒரு குறுச் செய்தியை (எஸ்எம்எஸ்) ஜேவிபிக்கு ஆதரவாக பதிய அந்த நபருக்கு ஐம்பது ரூபா காசு வழங்கப்படுகின்றது என ஹிருனிக்கா கண்டு பிடித்திருப்பதாகவும் கூறுகின்றார்.
அப்படியாக இருந்தால் இது நல்ல சுய கைத்தெழிலும் கூட. அவர் தருகின்ற மேலதிக தகவல்களுக்காக நாமும் காத்து நிற்பதுடன். இது பற்றி சில கேள்விகளை கேட்கத் தோன்றுகின்றது. இப்படி ஜேவிபி.க்காக எழுபது ஆயிரம் பேர்வரை தொழில் செய்கின்றார்களாம். அப்படியானால் ஒரு குறுச் செய்திக்காக மொத்தம் முப்பத்தி ஐந்து (35) இலட்சம் செலவாகும்.
தொழிலுக்காக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 50 குறுஞ் செய்திகளை அனுப்புகின்றார் என்று வைத்தக் கொண்டால் அவர்களுக்கான நாளாந்தக் கட்டணம். பதினேழு கோடிக்கும் மேல் (17.5) செலவாகும். எனவே அரசியல்வாதிகள் கருத்துக்களை சொல்கின்றபோது குடிகள் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் வேண்டும்.
நன்றி: 10.03.2024 ஞாயிறு தினக்குரல்