ஹரினின் தாராள மனசு!

-நஜீப்-

கடந்த ஈஸ்டர் தாக்குதலின் போது வாய் உலறி அமைச்சர் ஹரின் பர்ணாந்து சிக்கலில் மாட்டிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று மீண்டும் இலங்கை இந்தியாவின் நிலப்பரப்பு என்று ஒரு வைபவத்தில் பேசி இந்தியாவை அதிகமாக திருப்திப்படுத்தப் போன அமைச்சரை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும். அவர் வகிக்கின்ற அமைச்சுப் பதவியை உடன் பறிக்க வேண்டும் என்று கோஷங்கள்.

நாட்டிலுள்ள சிவில் அமைப்புக்கள் அவருக்கு எதிராக போர்க் கொடி பிடித்து இன்று போராடிக் கொண்டிருக்கின்றன. ரணில் ஜனாதிபதியானதும் அவரிடம் போய் அமைச்சு வாங்கி சஜித்துக்குத் தூரோகம் பண்ணிய இந்த ஹரின் இப்போது பெரும் சிக்கலின் மாட்டி இருக்கின்றார். மேலும் உங்களுக்கு இலங்கையில் காணி நிலம் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் அவர் மேலும் அங்கு பேசி இருக்கின்றார்.

ஜனாதிபத் தேர்தலில் இவரைத் தனது பிரச்சாரத்துக்குப் பொறுப்பாக ஜனாதிபதி ரணில் நியமித்திருந்ததும் தெரிந்ததே. அமைச்சர் தனது இந்த தவறாக வார்த்தை பிரயோகத்துக்காக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். அவரது கருத்துக்கள் அரசியல் யாப்பின் அடிப்படைக்கே முரணானது என்றும் போராட்டங்கள்-எதிர்ப்புக்கள் வலுக்கின்றன.

நன்றி: 25.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பிரசன்ன சின்னப் பையன்.!

Next Story

தேசிய அடையாள அட்டைக்கு டின் இலக்கம்!