சஜித் ஐதேக.வுக்கு!

-நஜீப்-

தேர்தலை எதிர்பார்த்து கட்சிகள் கூட்டணிகள் சமைக்கின்றன. கூட்டணி அமைக்கின்ற போது கட்சிக்குள் பிளவுகளும் வருகின்றன. பெரும்பாலும் இப்படியான குழப்பங்கள் சஜித் அணியில்தான் அதிகளவில் நடக்கின்றன. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி கதவுகள் எப்போதும் சஜித் பிரேமதாசாவுக்கு திறந்தே இருக்கின்றது.

UNP internal crisis: State Min. Range Bandara resigns as Anamaduwa organiser

அவர் வேண்டி நேரம் வந்து எம்முடன் இணைந்து கொள்ள முடியும். அதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை. இப்படிக் கூறுகின்றார் ஐக்கிய தேசியக் காட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரா. ஒருமுறை மஹிந்த ராஜபக்ஸ தனது கட்சி கதவுகள் சலூன் கதவுகள் போன்றது, அங்கு எவரும் வரலாம் வெளியே போகலாம் என்று குறிப்பட்டிருந்தார். அதே நேரம் ஜேவிபி.

தனது அணியில் வந்து சேர வரிசையில் ஆட்கள் இருந்தாலும் அவர்களை உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. கண்ணியமான அரசியல்வாதி என்று கருதப்படும் டலஸ் நிலையும் அப்படித்தான். அவரை உள்வாங்கிக் கொள்ள பச்சை கொடி காட்டவில்லை.

மஹிந்த ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு டலஸ் இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கின்றார். அவரை உள்வாங்குவது தொடர்பில்நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் எழுபது (70) சதவீத எதிர்ப்பும் முப்பது (30) சதவீத ஆதரவு நிலை.

நன்றி: 18.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சீருடை-பாடப் புத்தகங்கள்:  அமைச்சின் அறிவிப்பு

Next Story

நெருப்பாகிய ஐயா சம்.!