-நஜீப்-
வார்த்தைகளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் சமைக்கலாம். அந்த வார்த்தைகள் எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகின்றதே அதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கின்றது. தெருவில் இருக்கின்ற ஒரு பிச்சைக்காரன் தெரிவிக்கின்ற அதே வார்த்தையை ஒரு பிரபல்லயம் உச்சரிக்கின்ற போது அதன் கனதியில் பாரிய பெருமான வித்தியாசங்கள் ஏற்படுகின்றது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி விண்கற்கள் தரையை நோக்கி விழும் வேகத்தில் சரிந்து கொண்டு வந்தது. இப்போது நாம் அதனை ரொக்கட் வேகத்தில் உயர்த்திக் கொண்டு செல்கின்றோம். இப்படி கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரை துவக்கி வைத்து உரையாற்றிய போது நமது ஜனாதிபதி ரணில் அங்கு பேசி இருந்தார்.
இதன் உண்மைத் தன்மைகளை குடிமக்கள்தான் நமக்குச் சொல்ல வேண்டும். இதுதான் யதார்த்தம் என்றால் அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தான் மீண்டும் நமது ஜனாதிபதி. இதனைக் கண்டு கொள்வதற்கு மனிதனுக்கு ஆளும் மொட்டுத் தரப்பு முதலில் ஜனாதிபதி வேட்பு மனுவைக் அவருக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ரொக்கட் வேக பொருளாதார வளர்ச்சியை அளவீடு செய்ய முடியுமாக இருக்கும்.
நன்றி: 11.02.2024 ஞாயிறு தினக்குரல்