–நஜீப்–
கடந்த வாரம் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்காவை அவர்களது பெலவத்த செயலகத்தில் போய் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து அவருடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருக்கின்றார். அப்போது அரசியல் செயல்பாடுகள் தொடர்பாகவும் தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றியும் அணுரவிடம் கேட்டிருக்கின்றார் அமெரிக்கத் தூவர்.
நீங்களும் நாட்டில் தானே இருக்கின்றீர்கள், மக்களின் உணர்வுகள் பற்றி எம்மை விட உங்களுக்கு நன்றாகவே தகவல்கள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கும். எனவே பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டியது உங்கள் தலைவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
எனவே மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஆட்சியாளர்கள் ஆப்பு வைப்பார்களானால் அப்படியானவர்களுக்கு உங்கள் தலைவர்கள் ஆதரவளிப்பது தவறு என்ற செய்தியை அவர்களிடம் சொல்லி வையுங்கள் என்று அணுரகுமார திசநாயக்க அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சங் முகத்திற்கே நேரில் கூறி இருக்கின்றார்.
தற்போது செல்வாக்கான இராஜதந்திரிகள் ஜேவிபி. தலைவர்களைப் போய் சந்திப்பது தொடர்ப்பில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் சிலர் மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள். இது தொடர்பாக அவர்கள் தமது மனவேதனைகளை சில பகிரங்கமாக வெளியில் கூறியும் வருகின்றார்கள்.
நன்றி: 29.10.2023 ஞாயிறு தினக்குரல்