-நஜீப்-
தேர்தல் வரும் போது சமூகத்துக்குப் பிரதிநிதித்ததுவம் கேட்டு கட்சிகள் கோஷம் போடுவதும் தமது இனத்தை குலத்தை உசுப்பேற்றுவதும் வழக்கமான நிகழ்வுதான். ஆனால் இந்த நாட்டில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பாக அவர்களது அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் ஒரு கௌரவமும் மரியாதையும் மக்களுக்கு முன்பு இருந்தது.
தமது இனத்துக்காக நாடளப்போவோர் அர்வுகளில் தவறாது பங்கு கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்புகள் இருப்பதும் இயல்பானது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பாக நாம் நீண்ட நாட்களாக அவர் தனது தலைமைப் பதவியையும் பிரதிநிதித்துவத்தையும் செயல்படக் கூடிய ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்தோம்.
இன்று அவருக்குப் பக்க துணையாக இருக்கின்ற சட்டவல்லுணரே தலைவர் சம்பந்தன் ஐயா நாடாளுமன்ற அமர்வில் வெறும் பதிமூன்று சதவீதமே பங்கு கொண்டிருக்கின்றார் என்று விமர்சித்து வருகின்றார்.
பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது போல மரணம் வரை ஒரு மனிதன் பதவியைக் விடாக்கண்டனாக வைத்திருக்கின்றார் என்றால், தண்டிக்கப்பட வேண்டியது அந்த மனிதனல்ல கட்சியாகத்தன் இருக்க வேண்டும். அவரைகுறை சொல்லி காலத்தை ஓட்டுவதுதான் இனத்துக்கான உரிமைப்போரோ?
நன்றி: 29.10.2023 ஞாயிறு தினக்குரல்