காஸா: மருத்துவமனை மீதான தாக்குதல்  அமெரிக்காவுக்கு நெருக்கடி

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு நிராகரித்திருக்கிறது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

சிகிச்சையின் போது இடிந்து விழுந்த மேற்கூரை

செவ்வாய் இரவு (அக்டோபர் 17) அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. ரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

‘எல்லை கடந்த மருத்துவர்கள்’ என்ற மனிதாபிமான உதவி செய்யும் அமைப்பைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு-சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், “தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார்.

இந்தச் சம்பவத்தை “ஒரு படுகொலை” என்று அவர் விவரித்தார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

தாக்குதலுக்கு பின் மருத்துவமனையின் நிலை எப்படி உள்ளது?

காஸா மருத்துவமனை தாக்குதலில் 471 பேர் கொல்லப்பட்டதாகவும், 314 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் தாக்குதலுக்குள்ளான அல்-அஹ்லி மருத்துவமனையைச் சுற்றி காணப்படும் நிலைமை “இதுவரை பார்த்ததில்லை, விவரிக்க முடியாது” என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாக்டர் அஷ்ரப் அல்-குத்ரா வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவமனையின் தரையிலும், தாழ்வாரங்களிலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சில இடங்களில், மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். பலர் தங்கள் முறை அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன.” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்த குண்டுவெடிப்பில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சிலருக்கு “உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்” அளவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன, பல காயங்களுக்கு “இங்குள்ள திறன் இல்லாத வரையறுக்கப்பட்ட மருத்துவக் குழுக்களால்” சிகிச்சை அளிக்கப்படுகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

தாக்குதலுக்கு பிறகு நிலைமை என்ன?

அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் காணப்படும் நிலை, “முன் எப்போதும் கண்டிராத நிலை, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என காஸாவில் உள்ள பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அஷ்ரஃப் அல்-குத்ரா, “மருத்துவர்கள் மண்ணில் நின்றுக் கொண்டும், மருத்துவமனை வராண்டாக்களில் நின்றுக் கொண்டும் அறுவை சிகிச்சைகள் செய்து வருகின்றனர். சில இடங்களில் மயக்க மருந்து கொடுக்காமலே அறுவை சிகிச்சை செய்கின்றனர்” என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். “பலர் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள காத்திருக்கிறார்கள். மருத்துவ குழுக்கள் உயிர்களை காப்பாற்ற முயன்று வருகிறார்கள்” என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வெடிவிபத்தில் பல குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். “சிலருக்கு மிகவும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. முழுமையான மருத்துவ வசதிகள் இல்லாத குறைவான மருத்துவக் குழுக்களால் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன” என அவர் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

‘தாக்குதலை நேரில் பார்த்தேன்’

சம்பவத்தின்போது அருகில் இருந்த பிரிட்டிஷ்-பாலத்தீன கட்டுமானப் பொறியாளரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜாஹர் குஹைல் பிபிசியிடம் கூறுகையில், தான் கண்டது ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரம்’ என்றார்.

“எஃப்-16 அல்லது எஃப்-35 ரக போர் விமானங்களில் இருந்து வந்த இரண்டு ராக்கெட்டுகள் மக்களை இரக்கமின்றி கொன்றதைப் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.

வெடிப்பில் ஏற்பட்ட தீயினால் பலர் உயிரிழந்ததாகவும், முதலில் வந்த மீட்புப் பணியளர்களிடம் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்குத் தேவையான உபகரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பு இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டி, இதை ஒரு ‘கொடூரமான படுகொலை’ என்று வர்ணித்தது.

மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றி இஸ்ரேல் கூறுவது என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இருதரப்புமே பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றி இஸ்ரேலிய இராணுவத்தின் டேனியல் ஹகாரி விரிவாகப் பேசினார்.

  • நேற்று உள்ளூர் நேரப்படி 18:59 மணிக்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் என்ற போராளிக் குழுவால் “சுமார் 10 ராக்கெட்டுகளின் சரமாரியாக” ஏவப்பட்டதாக ஹகாரி கூறினார்
  • அதே நேரத்தில் மருத்துவமனையில் வெடிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.
  • இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் வான்வழி காட்சி பகுப்பாய்வு, “தவறான” இஸ்லாமிய ஜிஹாத் ராக்கெட்டால் வெடிப்பு ஏற்பட்டது என்பதை “முழுமையான உறுதியுடன்” காட்டுகிறது, இது மருத்துவமனைக்கு அருகிலுள்ள கல்லறையில் இருந்து ஏவப்பட்டது.
  • “சேதமடைந்த ஒரே இடம்” மருத்துவமனைக்கு வெளியே “எரியும் அறிகுறிகளைக் காணக்கூடிய ஒரு கார் நிறுத்துமிடம்” என்று ஹகாரி கூறினார்.
  • இஸ்ரேலிய தாக்குதல்கள் “பள்ளங்கள் மற்றும் கட்டமைப்பு சேதம்” போன்ற மிகவும் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் வாதிட்டார்.
  • ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
  • ஹகாரி கூறுகையில், “ஹமாஸ் தங்களுக்குத் தெரியும் என்று கூறியது போல் விரைவாக என்ன நடந்தது என்பதை அறிய இயலாது” என்றார்.
  • இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் வாதத்தை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று ஒரு நிருபர் கேட்டபோது, இஸ்ரேல் கடந்த காலத்தில் “முடிவெடுப்பதில் விரைந்து செயல்பட்டது” என்று ஒப்புக்கொண்டார், ஆனால் அவர்கள் “இரட்டை சரிபார்ப்பதற்கு” பல மணிநேரம் எடுத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார். அவர்களின் உளவுத்துறையும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்:
  • ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தி, “காசாவிற்குள் இருந்து” ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் கண்காணித்தது. அவை அருகிலுள்ள கல்லறையிலிருந்து ஏவப்பட்டதைக் காட்டும் பாதையுடன் ராக்கெட் தவறான பாதையில் செல்வது குறித்து அவர்கள் தகவல் பரிமாறிக் கொண்ட ஆதாரமும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு மறுத்துள்ளது.

ஹமாஸ் – பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் வேறுபாடு என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேலிய இராணுவம் குற்றம்சாட்டும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் காசா பகுதியில் இரண்டாவது பெரிய போராளிக் குழுவாகும். இது ஈரானால் ஆதரிக்கப்படுகிறது.

இது ஹமாஸைப் போன்ற இஸ்லாமிய சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் அரசின் அழிவிலும் அது உறுதியாக உள்ளது. இது பொதுவாக ஹமாஸை விட தீவிரமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில், ஹமாஸின் நடவடிக்கைகள் ஆளும் சக்தியாக பொறுப்புகளைக் கொண்டிருப்பதால், அதன் செயல்பாடுகள் தணிந்ததாகத் தோன்றியது.

இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸிடமிருந்து வேறுபட்டு தனித்து இயங்குகிறது. ஆனால் பெரிய குழுவால் பொதுவாக தேவைப்படும்போது அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது.

இஸ்லாமிய ஜிஹாத் அதன் சொந்த போராளிப் பிரிவு, அல் குத்ஸ் படை மற்றும் அதன் சொந்த ராக்கெட் ஆயுத கையிருப்பைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே, இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸ் நடவடிக்கையில் இணைவதாகக் கூறியது.

அமைதியாக இருக்க முடியாது – இரான்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி இந்த தாக்குதலுக்கு செவ்வாய்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் தீப்பிழம்புகள் வெகு விரைவில் இஸ்ரேலை விழுங்கும் என அவர் எச்சரித்தார். இரான் இந்த தாக்குதலுக்காக ஒரு நாள் துக்கம் அனுசரித்தது.

சமூக ஊடக x தளத்தில், ரைஸி, “காஸா மருத்துவமனையில் வீசப்பட்ட அமெரிக்க இஸ்ரேலிய குண்டின் தீப்பிழம்புகள் விரைவில் இஸ்ரேலை விழுங்கும். இந்த போர் குற்றங்களின் போது யாரும் அமைதியாக இருக்கக் கூடாது” என்று பதிவிட்டிருந்தார்.

அமெரிக்கா மீது ரஷ்யா சாடல்

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா அமெரிக்க கொள்கைகளை தாக்கி பேசினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கிழக்கிலிருந்து வரும் தகவல்களை நான் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒபாமா (பராக் ஒபாமா) அடிக்கடி சொல்வதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் –‘அமெரிக்க கொள்கைகளுக்கு மிக்க நன்றி, இந்த உலகம் மேலும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. எனினும், இப்போது ‘எவ்வளவு’ பாதுகாப்பு என பார்க்கிறோம்’” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்சௌதி அரேபியா என்ன சொல்கிறது?

அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான தாக்குதலை அருவருப்பானது என சௌதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளின் அப்பட்டமான மீறல் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தொடர் சர்வதேச கோரிக்கைகளுக்கு பிறகும், மக்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு சர்வதேச மனித உரிமை சட்டங்களை அனைவருக்கும் சமமாக பொருத்தி பார்க்க இந்த சம்பவம், சர்வதேச சமூகத்தை நிர்பந்திக்கிறது.

இஸ்ரேல் செய்யும் குற்றங்கள் என வரும் போது இரட்டை நிலைபாடு எடுக்கப்படுகிறது, ஆனால் சர்வதேச சமூகம் ஆயுதமற்ற பொதுமக்களை காப்பாற்ற தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பாலத்தீனத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், பாதுகாப்பான பாதை வழங்க வேண்டும் என்றும் உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை காஸாவில் சிக்கியுள்ள மக்களுக்கு சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று சௌதி அரேபிய அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

சர்வதேச சட்டஙகளை மீண்டும் மீண்டும் மீறி வருவதற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பொறுப்பாக்க வேண்டும் என்றும் சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் என்ன சொல்கிறது?

மருத்துவமனை தாக்குதலை கண்டித்து, விரைவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் அடிப்படை சேவைகளும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய சட்டத்தின் கீழ், குடிமக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளின் கீழ், குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் மற்றும் அவர்கள் மோதலில் குறிவைக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்துக்கு உடனடி போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது, இது நடக்கவில்லை என்றால், முழு பிராந்தியத்திலும் பதற்றம், வன்முறை மற்றும் நிலையற்ற தன்மை அதிகரிக்கும் அபாயம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Previous Story

காஸா மருத்துவமனை தாக்குதல்: யார் காரணம்? 

Next Story

ஹெஸ்புல்லா தோன்றியது எப்படி? அது  இஸ்ரேலை அழிக்க நினைப்பது ஏன்?