-நஜீப்-
தற்போது சஜித் அணியில் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அநேகமாக அந்த அணிக்குள் இருந்து கொண்டு ஒரு கிளர்ச்சியாளனாக செயலாற்றுகின்றார் என்று தெரிய வருகின்றது. அவரது வார்த்தைகளில் இதனைச் சொல்வதாக இருந்தால், தனது பாதைக்கும் சஜித் போகும் வழிக்குமிடையே பாரிய வித்தியாசம் இருக்கின்றது என்று நேரடியாக விமர்சிக்கின்றார்.
இதனைத் தான் கட்சிக் கூட்டங்களிலும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதாகவும் அவர் அங்கு பகிரங்கமாக குறிப்பிடுகின்றார். சில விடயங்களில் தலைவர் சஜித் தீர்மானம் எடுக்கின்ற போது அடுத்தவர்களை கலந்து பேசாது தன்னிச்சையாக முடிவுகளைச் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
இன்று சஜித் அணியில் இருக்கின்ற ஒரு செல்வாக்கான அரசியல் சக்தியாக பீல்ட் மார்ஷல் இருந்து வருகின்றார் என்பதைக் குறிப்பிட முடியும். தலைவர் தீர்மானம் எடுக்கின்ற விடயங்களில் சேற்றில் நாட்டில் கம்பு போல பல இடங்களில் செயலாற்றி வந்திருக்கின்றார்.
இதனை நான் கட்சியல் இருக்கின்றவர்களிடம் பேசினாலும் அதற்கு எதிராக குரல்கொடுக்க அவர்கள் அஞ்சுகின்றார்கள். எனக்கு அந்த அச்சம் கிடையாது, தான் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் வெற்றி நிச்சயம் என்றும் துனிந்து கூறுகின்றார் பீல்ட் மார்ஷல்.
நன்றி: 08.10.2023 ஞாயிறு தினக்குரல்