ஒத்திவைக்கப்படும் உயர்தரப் பரீட்சை: திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு?

திகதிகளில் மாற்றம்!

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என கல்வி  அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்படும் உயர்தரப் பரீட்சை: திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு | Advance Level Examination Education Minister

இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் திங்கட் கிழமைக்குள் (நேற்றையதினம் (02)) அறிவிப்பு வெளியாகும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

மாலத்தீவில் உள்ளே வரும் சீனா?

Next Story

மீண்டும் நெருக்கடி : பொருட்களின் விலை அதிகரிக்கும் -மத்திய வங்கி ஆளுநர்