ஹெலிகாப்டர் விபத்து : பிந்திய தகவல் தளபதி பலி!!

நீலகிரி மாவட்டத்தில் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் இறந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவரது உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்கடனுக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான எம்ஐ-17வி5 ரக விமானம் புறப்பட்டது. அப்போது வெலிங்டனை அடைய 10 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத் துறையை சேர்ந்த 14 பேர் பயணித்ததாக தெரிகிறத

7 பேரின் நிலை என்ன

இந்த விமானத்தில் 7 பேர் வரை பலியாகியுள்ளனர். மற்ற 7 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இந்த விமானத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவியும் பயணித்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

தீயணைப்பு அதிகாரிகள்

விமான பெட்ரோல் என்பதால் அது அதிக வீரியத்துடன் வெடித்து சிதறி கொண்டே இருக்கிறது. மேலும் அடர்ந்த காட்டு பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு மணி நேரமாக விமானம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அடையாளம்

சம்பவ இடத்திற்கு உள்ளூர் ராணுவ அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்களிடம் உள்ளூர் மக்கள் கூறுகையில் 80 சதவீதம் எரிந்த நிலையில் இரு உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சில உடல்கள் மலையின் அடிவாரத்தில் விழுந்து கிடப்பது தெரிய வருகிறது. அந்த உடல்களை மீட்கவும் அவற்றின் அடையாளத்தை கண்டறிவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

6 பேர்

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிந்திய தகவல்

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. இதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உள்பட 10 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை.

முப்படை தலைமை தளபதி நிலை ?

மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு, விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ஐஏஎப் எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் என்றும், இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்துள்ளார் என்றும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

இனவெறியை எதிர்த்தவர் மரணம்

Next Story

கஷோக்ஜி கொலை: சௌதி காவலர் கைது