விக்கி ஐயா கலர் கனவு!

-நஜீப்-

ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்குப் போக ஏற்பாடுகளைச் செய்த நேரம் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் தலைவர்களும் மோடிக்கு ஆளுக்கு ஆள் கடிதம் போட்டு தமது தேவைகளை அதில் பட்டியல் போட்டு, அப்பா வரும் போது இதனையொல்லாம் வாங்கி வாருங்கள் என்பது போல ரணிலிடம் இதனை எல்லாம் கேட்டுத் தாருங்கள் எனக் கடிதம் அனுப்பினார்கள். ஆனால் அந்தக் கடிதங்கள் வெறும் நாடகம்.

இதனால் ஆகப் போவது ஏதுமே கிடையாது என்று நாம் அன்றே சொல்லி இருந்தோம். ரணில் அழைக்கும் போதெல்லாம் கொழும்புக்கு ஒடும் கதையும் அப்படித்தான் அமைந்தது. எல்லா நாடகங்களும் மக்களை ஏமாற்றும் ஏற்பாடுகள் என்பது நமது வாதமாக இருந்தது.

சீ…சீ… இப்போது எல்லாம் பழமும் புளிக்குதே  என்ற நிலைக்கு தலைவர்கள் ஒட்டு மொத்தமாக வந்து விட்டார்கள் போலும்.! புதுக் கதையாக ஐயா விக்கிக்கு இப்போது ஒரு கலர் கனவு. இனத்துகாக ஒன்றாக கடிதத்தை கூட தயாரிக்க நாதி இல்லா இந்தத் தலைவர்கள் இப்போது மட்டும் கூண்டோடு போய் மோடியுடன் பேச்சாம்.!

முதலில் எதை பேசுவது? அதையாவது சமூகத்துக்கு சொல்வது நல்லது. அடுத்து இன்னும் சில மாதங்களில் அங்கு தேர்தல். இது ஐயாவுக்கு  நமது நினைவூட்டல். தீர்வு விவகாரத்தில் பெரியவர் மோடி நிலைப்பாடே புதிராக இல்லையா?

நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா! லோக்சபாவில்  நிறைவேறியது

Next Story

 கிழக்கு  ஆளுநர் கோழைத்தன அறிக்கை வேலுகுமார் MP விளாசல்