தேர்தலில் ஜொனிக்கு படுதேல்வி!

-நஜீப்-

ஆளும் மொட்டுக் கட்சியினர் தற்போது தொகுதிவாரியான கூட்டங்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள். ஒழித்து ஓடியவர்கள் இப்போது மெல்ல மெல்ல களத்துக்கு வரத்துவங்கி இருக்கின்றார்கள். இது பற்றி பேசும் போதும் குருனாகல ஜொஸ்டன் பெர்ணான்டோ இப்போது பழையபடி மக்கள் எங்களை ஆதரிக்கின்றார்கள் என்பதனை எதிர்க் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜேவிபி.க்கு இருந்த அலை இப்போது ஓய்ந்து விட்டது. நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் வெற்றி எங்களுக்ககுத்தான் என்று அவர் முழங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜொனி பிரதிநிதித்துவம் செய்கின்ற  நிகவெரடிய கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் மொட்டுக் கட்சி படுதோல்வி அடைந்தது.

அங்கு இருக்கின்ற உறுப்புரிமையில் ஜேவிபி ஆதரவு குழுவினர் எழுபத்தி ஐந்து (75) சதவீத உறுப்பினர்களை வெற்றி கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஆளும் தரப்பினர் என்னதான் மேடைகளில் முழங்கினாலும் அவர்கள் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதிலும் அவர்கள் பக்கத்தில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மிஸ் யுனிவர்ஸ் 2023 முறைப்பாடுகள்!

Next Story

துருக்கியின் அதிரடி ஆட்டம்!