சில தினங்களுக்கு முன்னர் கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் அதிபர் அசாட்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குருளைச் சாரணீயர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை நாம் இங்கு பிரசுரிக்கின்றோம்.
இந்த நிகழ்வில் சாரணீய குழுமத்தைச் சேர்ந்த முக்கிய நிருவாகிகளும் இன்னும் பல சிறப்பு விருந்தினர்களும் சிறுவர்களது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருக்கின்றார்கள்.
வைபவத்தின் போது 28 சிறுமியர்களுக்கும் 37 சிறுவர்களுக்கும் அங்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. மொத்தமாக 65 சிறுவர்கள் இன்று குருளைச் சாரணீயத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.