காசு சம்பாதிக்க ரஜினி!

-நஜீப்-

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து பணம் சம்பாதிக்க புதுக் கண்டுபிடிப்பாக ரஜினி தெரிவாகி இருக்கின்றார். இது என்ன கதை என்று பார்த்தால் இந்தியாவிலிருந்து உல்லாசப் பிரயாணிகளை இங்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சாரி அதில் நமக்கு முரண்பாடுகள் கிடையாது. அவர் வரட்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இன்றுவரை எந்த முன்னேற்றங்களும் இல்லை. தொடர்ச்சியாக ஏமாற்று நடவடிக்கைகள்தான் தொடர்கின்றன.

இந்தியாவையும் ஏமாற்றி இலங்கைத் தமிழர்களையும் உலகையும் ஏமாற்றி இப்போது ரஜினி.! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்று வரும் கதை போலதான் இது வருகின்றது. இப்படியாக யாரையும் கொண்டு வந்து காப்பாற்றும் நிலையில் இன்று நாடு இல்லை.

கடன்… கடன்… தான் நம் முன்னே நிற்க்கின்ற ஒரே கடவுள். இந்தக் கடன் விவகாரத்தில் ஐ.எம்.எப் கொடுத்த கடன்களைவிட இந்தியாதான் இலங்கைக்கு மிகப் பெரிய உதவிகளை நமக்குச் செய்திருகின்றது. ஆனால் இலங்கை இராஜதந்திர நகர்வுகளுடன் பார்க்கும் போது இந்திய இன்றுவரை தோற்றுப் போய் இருக்கின்றது. அல்லது அவர்களும் நடிக்கின்றார்கள்.?

நன்றி: 04.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜோர்டான் இளவரசர் சவுதி கட்டிடக் கலை நிபுணரை மணந்த 

Next Story

விமலுக்கு எதிராக வழக்கு!