கல்லில் நார் உரித்தல்!

-நஜீப்-

அரச படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கோட்டா அரசு பணம் செலவிட்டு வந்திருக்கின்றது என்று அண்மையில் குருனாகலையில் நடந்த முன்னாள் படையினருடனான  ஒரு சந்திப்பில் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார். ஆளும் தரப்பினரின் பலத்த அழுத்தங்களுக்கு மத்தியிலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

அங்கு பேசும் போது ஆட்சியாளர்கள் அரசு படைகளுக்கும் பயங்கரவாதி சஹ்ரான் அமைப்புக்கும்  பணம் செலவு செய்தது ஒரு அபூர்வ நிகழ்வு. இந்த அதிசய நிகழ்வை செய்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ என்றும் அங்கு குறிப்பிட்டார். இதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹவும் சிங்கள கடும் போக்கு ஆட்சியாளர்கள்தான் இந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

நாட்டிலுள்ள பிரதான எதிரணிகள் அனைத்தும் இதே பாணியில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. இந்த நாட்டில் இருக்கின்ற கிருஸ்துவத் மத போதகர்களின் குற்றச்சாட்டும் அதுவாகத்தான் இருக்கின்றது. எனவே இந்த ஆட்சியில் இதற்கு நீதியை எதிர்பார்ப்பது கல்லில் நார் உரிக்கும் காரியம்.

நன்றி:28.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தேர்தலும் கபட நாடகமும்!

Next Story

டொலரின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லும்?