-நஜீப் –
சில தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் இரகசியமாக சந்தித்திருக்கின்றார்கள் என்று தகவல். ஜனாதிபதி ரணிலுடன் வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்காவும் ராஜபக்ஸாக்கள் தரப்பில் மஹிந்த மற்றும் பசிலும் இதில் பங்கு பற்றி இருக்கின்றார்கள். முக்கியமான பல விடயங்கள் இந்தச் சந்திப்பின் போது கலந்துறையாடப் பட்டிருக்கின்றன.
அப்போது மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்தும் நம்மால் இப்படி தேர்தல்களைத் தள்ளிப் போட முடியாது என்று கூறிய போது, பசிலும் அதனை ஆமோதித்திருக்கின்றார். ஆனால் வஜிர அபேவர்தனாவும் சாகலவும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சில காலத்துக்கு தேர்தல் பற்றியே பேசக் கூடாது.
அப்படித் தேர்தலை நடாத்தினால் அது எந்தத் தேர்தலாக இருந்தாலும் அடுத்த நாளே நமக்கு நாசம்தான் என ராஜபக்ஸாக்களுக்குப் பதில் கொடுத்திருக்கின்றார்கள் அவர்கள். ரணில் அங்கு எதுவுமே பேசாது அமைதிய இருந்திருக்கின்றார்.
நன்றி: 09.04.2023 ஞாயிறு தினக்குரல்