சமூகப் பிரததிநித்துவம் பற்றிப் பேச வேண்டிய நிறுவனங்கள் அமைப்புக்கள் இந்தத் தேர்தலில் மௌனமாக இருந்து மாபெரும் வரலாற்றுத் தவறு ஒன்றைச் செய்து கொண்டிருக்கின்றன.
அதன் நிருவாகிகள் இப்படி நடந்து கொள்வதற்கு கடந்த காலங்களில் அவர்கள் எடுத்த பிழையான தீர்மானங்களை இந்த மௌனத்தில் சரி செய்ய முனைவதும் எங்களுக்குப் புரிகின்றது.
சமூக நிறுவனங்கள் மௌனித்து இருந்தாலும் அல்லது பழைய தவறொன்றை சரி செய்ய மற்று மொரு தவறை 2020 தேர்தலில் செய்து கொண்டிருந்தாலும் சமூகம் அப்படி மௌனிக்க வேண்டிய தேவை இல்லை. எவருக்கும் பயப்பட வேண்டிய தேவையும் இல்லை.
பதிலடி
உங்கள் பொன்னான புள்ளடியில் நீங்கள் இதற்கு அதிரடியான பதில்களைக் கொடுக்க முடியும். நாம் எதனைச் சொல்ல வருகின்றோம் என்பதனை விளங்கிக் கொள்ளும் அறிவு சமூகத்திற்கு இருக்கின்றது என்று நம்புகின்றோம்.