SJB – JVP மோதல்: காரணம்..?

மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது, எனவே தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

”உங்களின் தேர்தல் பிரசாரத்தில் அதிகமாக ஜே.வி.பியையே தாக்குகிறீர்கள். ஏன் அப்படி?” என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”அதற்குக் காரணம் உண்டு, எங்களுக்கு ஜே.வி.பி.யுடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. தேர்தலின் போது பிரதான கட்சியுடன்தான் மோதுவது வழக்கம்.

பிரதான கட்சியான மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால், நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது. ஜே.வி.பி.யினரும் தேர்தல் மேடைகளில் எங்களையே தாக்கிப் பேசுகின்றனர்.

இதனால் நாங்கள் அதற்குப் பதில் வழங்குகின்றோம். இது எமது நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாறிவிட்டது.

மேடைகளில் விவாதங்கள் புரிவதும், ஒரு கட்சியின் கொள்கையை இன்னொரு கட்சி விமர்சிப்பதும் வழமையான ஒன்று. இந்த அடிப்படையில்தான் இப்போது ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும் மோதிக்கொள்கின்றன ’’என தெரிவித்துள்ளார்.

Previous Story

1,137 உறுப்பினர்களை, வீட்டுக்கு அனுப்பியது UNP

Next Story

மயந்த பல்டி..?