–நஜீப்–
தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அது விரையில் முப்பதாக அமைய இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. இந்தக் கதையின் அடிப்படை அண்மையில் நுவரெலியாவில் வைத்து விமால் வீரவன்ச தெரிவித்த ஒரு கதை அமைகின்றது.
தனது கட்சிப் பரப்புக்கு அங்கு சென்றிருந்த விமல் இலங்கை விரைவில் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருக்கின்றார். மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுகின்ற சதி முயற்சியில் இறங்கி இருப்பதாக அவர் அங்கு தெரிவித்திருக்கின்றார்.
இந்திய நாணயத்தை இலங்கை நாணயமாக மாற்றுகின்ற முயற்சியில் இந்திய தற்போது ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டி வருகின்றார். தனது உத்தர லங்கா கட்சியின் பரப்புரைக்காக குளிரான நுவரெலியாவுக்குப் போன இடத்தில் வைத்துத்தான் அவர் சூடான இந்தக் கருத்துக்களை முன் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: 25.12.2022 ஞாயிறு தினக்குரல்.