-சாபி சிஹாப்தீன்-
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற ஊடகத்துறைக்கான அதி உயர் 2021க் கான தேசிய விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி பத்திரிகையின் சிரேஸ்ட உதவி ஆசிரியர் ஏ.ஆர்.ஏ.பரீலுக்கு இந்த முறை விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
இவர் உடதலவின்ன ஊடகவியலாளர் கூட்டணியின் (யூஏம்ஏ) தலைவர் என்பதுடன் சமூக விழிப்புணர்வு, குறிப்பாக சிறுபான்மை சமூக மற்றும் ஊடகவியலாளர்கள் நலன்கள் சர்ந்த விடயங்ளையும் மையமாக வைத்து தேசிய ரீதியில் விரைவில் நிறுவப்பட இருக்கின்ற சகோதரத்துவக் ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகவும் தற்போது செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் இவர் இது போன்ற அதிஉயர் விருதுகள் பலவற்றைப் பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை 2021க் கான சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ.சிரிவர்தன விருதை இவர் நேற்று முன்தினம் (13.12.2022) மாலை கல்கிஸ்ஸ மவுன்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்ற அற்கான நிகழ்வில் இந்த விருதை இவர் பெற்றுக் கொண்டார்.