கோட்டா எப்படி மாலே வந்தார் நாடாளுமன்றம் விசாரணை!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைதீவு அரசாங்கம் எப்படி வரவழைத்து என்பதை தெளிவுப்படுத்துமாறு கோரி மாலைதீவு தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளது என அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Dunya Maumoon தெரிவித்துள்ளார்.

மாலைதீவு அரசாங்கம் எப்படி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டுக்கு அழைத்து வர அனுமதித்து என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

இலங்கை மக்களின் உணர்வுகளைப் பற்றி மாலைதீவு அரசாங்கம் அக்கறை கொள்ளாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வருவது மிக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என கருதுகிறேன்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன்.

இலங்கை மக்களின் அபிலாஷைகளை மதிக்கின்றோம்

இலங்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை சந்தித்துள்ளது. மக்கள் தொழில், உணவு, எரிபொருள் இன்றி வாழ்க்கை கொண்டு நடத்த முடியாமல் இருக்கின்றனர்.

இலங்கை மக்களின் அபிலாஷைகளை மாலைதீவு மக்கள் மதிக்கின்றனர். அவர்கள் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றனர்.

அதனை நாம் உணர்வுபூர்வமானதாக கருத வேண்டும். இலங்கை மக்கள் தமது எதிர்பார்ப்புகளை வெளியிப்படுத்தியுள்ளனர் எனவும் Dunya Maumoon கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து விமானப்படை விமானத்தின் மூலம் ஜனாதிபதி மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து இன்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

சிங்கப்பூர் பாய்ந்த கோட்டா!

Next Story

சரத் பொன்சேகா ஜனாதிபதி !