ராஜபக்சே கோஷ்டி 4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு இலங்கை வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கோஷ்டியை சேர்ந்த 4 எம்.பிக்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரி தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவி வந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.