-நஜீப்-
28 கோடி பெருமதியான ஆணிகளைக் களவடியது தொடர்பில் தகவல்களைக் கேட்ட போது அங்கிருந்த அதிகாரிகள் அது தொடர்பான தகவல்களை கேட்டவர்களை உங்களுக்குப் பலத்தில் போவதற்குப் பயமாக இருந்தால் நீங்கள் படகில் கடந்து போகலாம் என்றும் அவர்கள் இது தொடர்பாக விசாரித்தவர்களுக்கு சொல்லி இருக்கின்றனர் ஆர்டிஓ ஊழியர்களும் அதிகாரிகளும்.
அவர்கள் பொது மக்களுடன் அநாகரிகமாக உரையாடிய முறை இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த முறைப்பாடுகள் ஓடியோ மூலம் மேலிடத்தில் எத்திவைக்கப்பட்டு மக்கள் கேள்விகளுக்கு முறையாக பதில் வழங்காதவர்கள் மீது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
அத்தோடு இந்தத் தொகை 20 கோடி வரையில் என்றும் இது நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட களவுகள். அத்தோடு இது ஆணி மட்டும் சம்பந்தப்பட்ட களவு அல்ல. இரும்புக் குழாய்கள் மற்றும் பித்தலை கம்பிகள் போன்றவையும் இங்கு திருடப்பட்டிருக்கின்றது.
இது போதைப் பாவனையாளர்கள் மட்டுமல்ல, திட்டமிட்ட கள்வர் கூட்டமும் சேர்ந்து பார்த்த வேலை என்று இப்போது தெரிய வந்திருக்கின்றன.
நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்