STF இடம் சிக்கிய ஈஸ்டர் மேலாளர்.. !

ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராக பணியாற்றிய நபரும் மற்றுமொரு நபரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி மாலை, கோதட்டுவ பொலிஸ் பிரிவின் மணிகமுல்ல பகுதியிலும், கடுவெல தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலும், சிறப்பு அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு (SOU) அதிகாரிகள் குழுவால் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல்..

அதன்போது கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 கிலோகிராம் 154 கிராம் குஷ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் ரூபா 100,000 பணத்துடன் ஒரு சந்தேக நபர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

STF அதிகாரிகளிடம் சிக்கிய ஈஸ்டர் தாக்குதல்தாரியின் மேலாளர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Stf Arrested Man With Billian Worth Drug

இதற்கிடையில், கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 கிலோகிராம் 106 கிராம் குஷ் போதைப்பொருள், ஒரு கார் மற்றும் 150,000 ரூபா பணத்துடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கோதட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் கோதட்டுவ மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 35 மற்றும் 64 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

STF அதிகாரிகளிடம் சிக்கிய ஈஸ்டர் தாக்குதல்தாரியின் மேலாளர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Stf Arrested Man With Billian Worth Drug

சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 01 வருடம் 08 மாதங்கள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபர் ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராகவும் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், தற்போது சிறையில் உள்ள தெமட்டகொட சமிந்தவின் முக்கிய உதவியாளரான ‘சப்பா’ என்ற நபரிடமிருந்து போதைப்பொருள் பெறப்பட்டது தெரியவந்துள்ளது.

Previous Story

චිචිගෙ රොකට්ටුව ගැන කියා, අගමැතිණිය අමාරුවේ දැමූ කුමන්ත්‍රණරුවන් මෙන්න!

Next Story

அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கூறியது என்ன?