மஹியங்கனை-ஹசலக்கயைச் சேர்ந்த பாத்திமா மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என, உயர் நீதிமன்றம் இன்று (30) புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்துடன் மசாஹிமாவின் அடிப்படை உரிமை, அரசினால் மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கான நஷ்டஈட்டை அரசும், பொலிஸ் பொறுப்பதிகாரியும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமெனவும், உயர்நீதிமன்றம் இன்றைய தனது தீர்ப்பில் மேலும் உத்தரவிட்டுள்ளது.





