“இங்கு வந்திருக்கின்ற இஸ்ரேல்-யூதர்கள்
மீதுதான் கூடுதலான ஆவதானம்
இருப்பது தெரிகின்றது.
ஆனால் இஸ்ரேல்-மொசாட்டுக்காக
கூலிக்குமார் அடிக்கின்ற ஒரு கூட்டமும்
இங்கு இருக்கின்றது என்பதனை
எவரும் மறந்து விடக் கூடாது.
இதில் முஸ்லிம்கள் கூட இருப்பார்கள்.
இதற்கு நல்ல உதாரணம்தான் ஈஸ்டர் தாக்குதல்!
அதில் எப்படி முஸ்லிம்கள்
உள்வாங்கப்பட்டு அவர்கள் பங்களிப்பு
நயவஞ்சகமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டது
என்பதும் நாம் பார்த்த காட்சிகள்.
இந்த ஊர்வலத்திலும் அவர்களின்
முகவர்கள் நுழைந்து இருக்க
வாய்ப்புக்கள் இருக்கின்றன.
போரின் போது உள்ளிருந்து ஈரானில்
நடந்த தாக்குதல்கள்-படுகொலைகளையும்
ஒருமுறை நினைத்துப்பாருங்கள்.!”
எனவே இங்குள்ள ஆட்சியாளர்களும் சமூகங்களும் எச்சரிகையாக இருக்க வேண்டும்!