21- கானல் நீராகும்?

நஜீப்

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு வெளிநாட்டுப் பிரசைகளுக்கு இலங்கை அரசியலில் இடமில்லை என்ற திருத்தங்கள் 19 பிளஸ் என்ற பெயரில் 21ல் வருகின்றது என்ற ஒரு நம்பிக்கை ஏப்ரல் 9ம் திகதி சம்பவத்திற்குப் பின்னர் பல இடங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

இன்று எதிர்பார்க்கப்பட்ட அந்தத் திருத்தங்களை 21 உள்வாங்குவதில் பல நெருக்கடிகள் காணப்படுகின்றன. இதனைத் தனது காலத்தில் சாதித்துக் கட்டுகின்றேன் அதற்குத்தான் நெருக்கடியான நேரத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்க்கின்றேன் என விஜேதாச குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் சொன்னபடி பெரிய மாற்றங்ளை அதில் இணைத்துக் கொள்ள முடியாதவாறு அவருக்கு அழுத்தங்கள். இன்று அவர் கையைப் பிசகுகின்றார்.

இதில் ராஜபக்ஸாக்கள் விருப்பங்கள்தான்  வெற்றி பெரும் அவர்கள் விரும்புவதுதான் நடக்கும் அவர்கள்தான் இதிலும் வெற்றி பெறுவார்கள் என்று இரு வாரங்களுக்கு முன்பு சொல்லி இருந்தோம்.

நாம் அறிந்த வரை இன்றுவரை இது அமைச்சரவையில் அங்கிகரிக்கப்படவில்லை. அப்படி நடந்தாலும் கரை சேருமா என்பது சந்தேகம்;. பணம்தான் தீர்மனிக்கின்ற சக்தி என்று வரும் போது ராஜாக்கள்தான் ஜெயிப்பார்கள்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சீனா-ரஷ்யா இடையேயான ஆமூர் பாலம் திறப்பு

Next Story

50 ஆண்டுகளுக்கு முன்பே.. பூமிக்கு விசிட் அடித்த ஏலியன்கள்?