-யூசுப் என் யூனுஸ்-
ரஸ்யா அதிபர் விலாடிமீர் புடின் இன்று உலகத்தில் இருக்கின்ற மிகவும் செல்வாக்கான ஒரு ஆட்சியாளர். அவரை முழு உலகமும் இரும்பு மனிதன் என்றதான் அழைக்கின்றது. தற்போது அவர் உக்ரைனுடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றார்.
அவருக்கு எதிராக 53 க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்க தலைமையில் உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு வருகின்றான. தற்போது பாபா வங்கா என்பவர் இவர் பற்றி ஒரு அதிரடியான தகவலை வெளியிட்டு வருகின்றார். 2024ல் ரஸ்யாவில் வைத்தே புடின் தனது படைவீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்படுவார் என்பதுதான் அந்தச் செய்தி.
இதற்கு முன்னர் ஒரு கறுப்பினத்தவர் அமெரிக்காவின் அதிபராக வருவார் என்ற செய்தியை இந்த பாபா வங்கா முன்கூட்டியே சொல்லி இருந்தார். இதற்கு முன்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புடின் கொல்லப்பட்டு விட்டார்.
இப்போது மக்கள் பார்வைக்கு தோன்றுகின்றவர் ஒரு டம்மி என்று சில காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அப்படியாக இருந்தால் பாபா கதைப்படி பார்த்தால் புடின் இன்னும் உயிரோடு இருப்பதால்தானே 2024 அவரது மரணம் பற்றி, பாபா கூறி இருக்க வேண்டும்.!
நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்