2 பெண்களின் காதல் விவகாரம்! பெண்ணை தேடி வந்த இந்திய பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பெண்களில் ஒருவர் இலங்கையர் என்பதுடன் மற்றைய பெண் இந்தியாவை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பெண்

தமிழகத்தை சேர்ந்த 24 வயதான பெண்ணும் அக்கரைப்பற்று பிரதேசத்தை 33 வயதான பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருக்கும் இந்திய பெண், தனது காதலியை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பணி சுமை காரணமாக இலங்கை பெண்ணுக்கு உடனடியாக கடவுச்சீட்டை பெற முடியவில்லை.

இதனால், இந்திய பெண் சுற்றுலா விசாவில் கடந்த 20 ஆம் திகதி இலங்கை வந்து, அக்கரைப்பற்றுக்கு சென்று இலங்கை பெண்ணினுடன் இரவு தங்கி இருந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் திருமணம் முடிந்து ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. இந்த பெண்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தொடர்பை எதிர்த்துள்ள பெண்ணின் தந்தை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் இரண்டு பெண்களையும் கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

 தன்னை தனது காதலியுடன் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால், இவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் என இலங்கை பெண், விசாரணைகளின் போது, நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெண்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி நாளைய தினம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் மனநல பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையின் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளட்ட தரப்பினர் நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் பேரணி ஒன்றை நடத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா !

Next Story

ஹீரோவானார் கௌரி சங்கரி தவராசா !வரலாற்றில் முதன் முறை:  கைதிக்கு  55 இலட்சம்  இழப்பீடு