இஸ்ரேலில் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 பேர் பலி

Latest Tamil News

இஸ்ரேலில் ரயில் நிலையத்தில் இன்று (அக்.,01) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். 11 காயமடைந்ததாக கூறப்படுகிறது.

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே ஜப்ஃபா நகரில் சைனாகோகெஜ் ரயில் நிலையத்திற்குள் இரு பயங்கரவாதிகள் புகுந்தனர்.

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 37 பயங்கரவாதிகள் பலி

மும்பை தாக்குதல் பாணியில் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர் 11 பேர் காயமடைந்தனர்.

இதையும் பாருங்க

இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு பயங்கரவாதியை தேடி வருகின்றனர்.

தொடர் துப்பாக்கிச்சூடு சத்தம் காரணமாக ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கி்னறன.

இதற்கிடையே இரு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ரயி்ல் நிலையத்திற்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

Previous Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: 30 பேர் பலி

Next Story

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?