-நஜீப்-
நாடாளுமன்றத்தை கலைக்கும் முன்னர் பல தமிழ் சமூக ஊடகங்கள் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி என்று ஒரு கதையை சந்தைப்படுத்தி இருந்தன. இது ஒரு திட்டமிட்ட நாடகம். அதில் எதிர்பார்ப்புத்தான் தெரிந்தது.
இது தொடர்பாக நாம் எம்பிபி. மற்றும் ஜனாதிபதி தரப்பில் தேடிப்பார்த்தால் அவர்களிடத்தில் அதற்கான எந்த சிக்னலும் தெரியவில்லை. சில இடங்களில் சட்ட விவகாரங்களில் சுமந்திரன் உதவிகளை அவர்கள் பெற்றுக் கொண்டிருப்பது உண்மை.
ஆனால் அமைச்சுக்களை கையளித்து அழகு பார்க்கும் அளவுக்கு அவர்களிடத்தில் பலயீனங்கள் இருப்தாக நமக்குத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தை கலைக்க முன்னர் இந்த அமைச்சு வழங்குகின்ற ஒரிரு நாட்களில் நடந்த ஒரு சின்ன முயற்சி இது.
முன்பு ஒரு முறையும் என்பிபி. அரசில் தமக்கும் அமைச்சுக்கள் கிடைக்கும் என்று சொன்ன அரசியல்வாதிகள் வடக்கில் மட்டுமல்ல மலையகத்திலும் இருந்தார்கள். பொதுத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் கூட்டணிகளை தகர்த்துக் கொண்டு சிலர் வெளியே வந்து அமைச்சுக்களுக்கு கை நீட்டவும் இடமிருக்கின்றது.
ஆனால் அனுர, ரணிலோ சஜித்தோ அல்ல என்றுதான் நாம் நம்புகின்றோம்.
நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்.