தமிழ் மக்கள் தரப்பில் பொது வேட்பாளருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்து வரும் நிலை அவர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அப்படி ஒருவர் வருவதை தடுக்கின்ற முயற்சிகளும் கூடவே நடக்கின்றன.
2024 ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழர்களை ஏமாற்ற முனைகின்ற ஒரு கூட்டம் வடக்கிலும் தெற்கிலும் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. தான் வெற்றி பெற்றதும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப் போவதாக ஜனாதிபதி ரணில் மீண்டும் கூறி வருகின்றார்.
இப்படி எத்தனையோ முறை தமிழர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். மலையக மக்களைக் கூட இப்படி பல முறை அரசியல்வாதிகள் ஏமாற்றி அவர்கள் வாக்குகளைக் கொள்ளையடித்திருக்கின்றாhகள் என்பதனை இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
1700 தருவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று ஜனாதிபதி ரணில் பேசி இருப்பது இப்போது வைரலாகி வருகின்றது.