பிரதேச சபையில் விசேட கூட்டம்
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட கூட்டமானது, இன்று (11.05.2026) தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிந்தவூருக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி
இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி சிபாரிசில் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த கலாச்சார மண்டப கட்டிடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதி நிந்தவூருக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு சபை உறுப்பினர்கள் அதனை பாராட்டியும் பேசியுள்ளனர்.






