–நஜீப்–
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மீண்டும் மு.கா.வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார். மீன்பாடும் மாவட்டத்தில் குறிப்பாக காத்தான் நகரின் அவர் முடிசூடா மன்னன் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஹக்கீம் தலமையிலான மு.கா.செல்வாக்கு முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாக சரிந்து வருகின்ற இந்த நேரத்தில் கலாநிதியின் இணைவு மு.காவுக்கு மட்டு மாவட்டத்தில் பெரும் செல்வாக்கை கொடுக்கும்.
ஹிஸ்புல்லாஹ்வில் இந்த வருகையை ஹக்கீம் எவ்வளவு தூரம் தூய்மையுடன் ஜீரணிப்பார் என்பதில் நமக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.
ஹக்கீமுடன் ஒப்பு நோக்கும் போது ஹிஸ்புல்லாஹ் சமூக ரீதியில் மிகப் பெரிய செயல்பாட்டுக்காரர்-இராஜதந்திரி என்பதனை நாம் வஞ்சகமின்றி சொல்லியாக வேண்டும்.
கிழக்கில் ரிசாட் பதியுத்திதீனுக்கு எதிராக ஹிஸ்புல்லாஹ் நல்ல துடுப்பாட்டக்காரன். ஆனால் ஹிஸ்புல்லாஹ்வை ஹக்கீம் பீதியுடன்தான் பார்ப்பார்.அங்கு வைத்திருப்பார் என்பதும் தெரிந்ததே.
ஹிஸ்புல்லாஹ்வும் இராஜதந்திரமாகத்தான் இந்த நகர்வை எடுத்திருப்பார். முஸ்லிம் சமூகத்துக்கு ஹக்கீமை விட ஹிஸ்புல்லாஹ் நம்பிக்கையான இராஜதந்திரியாகவும் செயல்பாட்டாளராகவும் இருப்பார் என்பது எமது கணிப்பு.
நன்றி: 15.01.2023 ஞாயிறு தினக்குரல்