ஹக்கீம் தப்புக் கணக்கு

-நஜீப்-

தேர்தல் நாட்களில் அனுர குமாரவுக்கு எதிராக அபாண்டங்களைச் சொல்லி பின்னர் பல்டியடித்தார் ஹக்கீம். தேர்தல் கூட்டங்களில் சஜித் வெற்றி பற்றி சமூகத்துக்கு ஒரு எளிமையான கணக்கை கற்றுக் கொடுக்கப் போய் இப்போது மூக்குடைபட்டிருக்கின்றார்.

அதே போன்றுதான் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மோசமான வார்த்தைகளில் அனுரவுக்கு ஆபான்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்-சமூகத்தை அச்சுறுத்தி வந்தனர். அதே நேரம் மலையக மற்றும் வடக்குக் கிழக்குத் தமிழ் தலைவர்கள் அப்படியான வசைபாடும் எந்தவொரு வார்த்தைகளிலும் அனுரவை பேசவில்லை.

மற்றுமொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமய நிருவனம் ஒன்றின்  கடிதத் தலைப்பை பாவித்து போலியாக செய்திகளைக் கொடுத்து இப்போது விவகாரம் பொலிஸ் வரை போய் நிற்க்கின்றது.

இது பற்றி நாம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போது. என்னுடன் இருக்கின்றவர்கள் எனது போனைப் பாவித்து ஏதாவது செய்து விட்டார்களோ தெரியாது என்று கூறி இருந்தார். இதனை நாம் ஒரு சகோதர ஊடகமொன்றிலும் சொல்லி இருந்தோம்.

நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்.

 

 

Previous Story

சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவியா!

Next Story

அனுர வெற்றியின் இரகசியம்: உதவிய இரு ஜனாதிபதிகள்!