நஜீப் பின் கபூர்
நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்
இந்தியாவையே புரட்டிப் போட்ட விஜேய தமிழக அரசியல்!
மனட் சாட்சியே இல்லாத ஆய்வாளர்களும் அடாவடிகளும்!
மேதினம் அனுர மாகாண தேர்தலுக்கான துவக்க பரப்புரை!
கடந்த பத்து நாட்களுக்கு இடையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் நம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஒன்று மே முதலாம் திகதி நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தினம். இதில் இலங்கையில் நடைபெற்ற மே தின நிகழ்வுகளும் அதில் புரையோடிப் போய் இருந்த அரசியல் பின்னணிகளும். அடுத்தது முழு தமிழ் உலகம் மட்டுமல்ல இந்திய இலங்கை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்திய தேர்தல் குறிப்பாக தமிழகத் தேர்தல் முடிவுகள். கடந்த ஏப்பரல் 23 நடைபெற்ற தேர்தல் வாக்குகள் மே நான்காம் திகதி எண்ணப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த இரு நிகழ்வுகளும் இன்றும் பேசு பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் எமது பார்வையையும்கருத்துக்களையும் வாசகர்களுடன் பேசுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.





