வாழ்த்தப் போக வேண்டாம்!

-நஜீப்-

(நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்)

அனுர குமர திசாநாயக வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தேர்தல் திணைக்களத்துக்கு போக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஆயத்தமாகி இருக்கின்றார். அப்போது குறுக்கே வந்த களுத்துறை மாவட்ட அவரது கட்சி முக்கியஸ்தர் ஒருவர் நீங்கள் அங்கே போக வேண்டாம்.

அது தேவையில்லை என்று தடுத்திருக்கின்றார். அப்போது அப்படி நாகரிகமில்லாது என்னால் நடந்து கொள்ள முடியாது என்று கூறி அங்கு போய் அவர் அனுரவுக்கு வாழ்த்தும் கூறி தேச நலன்களுக்கான தன்னாலான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் உறுதி கொடுத்திருக்கின்றார்.

தேர்தல் காலங்களில் தான் சற்று ஓவரகப் பேசி விட்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கோட்பதாகவும் புட்நோர்ட் சுஜீவவும் கூறி இருக்கின்றார். இதற்கிடையில் திஸ்ஸ அத்தநாயக்க போகும் இடமெல்லாம் தோல்விதான் என்ற விடயம் இந்த முறையும் அப்படியே நடந்திருக்கின்றது என்று ஒரு ஊடகவியலாளர் அவர் முகத்திற்கே கூறியபோது. திஸ்ஸ கடுப்பாகி கேட்டவரை முட்டால் என்று திட்டடியும் இருக்கின்றார்.

 

 

Previous Story

பொது வேட்பாளர் சாதித்தார்!

Next Story

ரணிலை ஏமாற்றி விட்டார்கள்!