இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு அரசு முறை பயணம் வந்துள்ள ஷேக்ஹசீனாவை பிரதமர் மோடி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார். இங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
இந்த வரவேற்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹசீனா; இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும். பயனுள்ள ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. என்றார்.
கிழக்கு பாகிஸ்தானை யஹியா கான் பிடியிலிருந்த்து காப்பாற்றி, பின் நாளில் நமக்கு நன்றியுடன் நடந்து கொள்வான் என நம்பி …. வங்க தேசம் என்று பெயரை வேறு சூட்டி முஜிபுர் ரஹ்மானை அதிபராக்கி, அதனால் இந்தியா என்ன பலனை கண்டது என்பது அன்றைய பிரதமர் இந்திராவுக்கே வெளிச்சம்.
ஆயிரக் கணக்கில் நம் ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தம், அவர்களின் குடும்பங்கள் அவர்களை பிரிந்து வாடிய துன்பம், வருஷக் கணக்கில் நம் வரிப் பணத்தில் அங்கிருந்து வந்த “அகதிகளுக்கு” சோறு, பிரியாணி போட்டது, அகதிகள் நிதி என்ற பெயரில் தபால் துறையினர் நம்மிடமிருந்து நிதியை தபால் தலை வாயிலாக, சிறிது சிறிதாக வருடக் கணக்கில் வசூலித்தது, இந்த தியாகங்களுக்கெல்லாம் என்ன பலன்?
அன்று தவிடு பொடியாக ஆகியிருக்க வேண்டிய கிழக்கு பாகிஸ்தான் இன்று லட்சக் கணக்கில் ரோஹிங்கியாக்களை அனுப்பி மேற்குவங்கம் அஸ்ஸாம் இவற்றை அடையாளம் தெரியாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.