/

வாகனம் கையளிப்பு

 

யூசுப் என் யூனுஷ்-

இது வரை கண்டி-உடதலவின்ன மடிகே பள்ளி நிருவாகத்துக்கு இருந்து வந்த பிரதேச ஜனாசாக்கள் தொடர்பான கையாள்கைகளுக்குத் தேவையான வாகனமொன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்து கொடுத்திருக்கின்றார். கண்டி-மெட்ரோ லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் சீ.எம். பைசர். அண்மையில் பள்ளி நிருவாகத் தலைவர் எம்.ஜீ.நிலாப்தீன் அவர்களிடம் இதற்கான ஆவணங்களையும் வாகனத்தையும் ஒரு எளிமையான வைபவத்தில் இவர் கையளித்திருக்கின்றார்.

 

மர்ஹூம்களான தனது தந்தை ஜே.எம்.காசீம் மற்று சகோதரரான சீ.எம்.இக்பால் ஆகியோரின் நினைவாக அவர் இந்த வாகனத்தை பள்ளி நிருவாகத்தினரிடம் கையளித்திருக்கின்றார். துறைமுக அதிகார சபையில் பணியாற்றிய சீ.எம்.இக்பால் அரபாத் இயக்கதின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் 1988 மகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. சீ.எம்.பைசர் ஜாமியா நளீமிய மூத்த விரிவுரையாளர் சீ.எம். ஐயூப் அலியின் இளைய சகோதரருமாவார்.

 

Previous Story

நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை நிலைப்பாடு

Next Story

இந்தியாவில் புதின்