வருகின்றது பொதுத் தேர்தல்!

-நஜீப் பின் கபூர்-

ரணில்-ராஜபக்ஸாக்கள் தீர்மானம்!
பிரதமர் பதவிக்கும் பசில் களத்தில்!

Basil Rajapaksa Turning The Wheel Of Change - Business Today

நாட்டில் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் என்று எல்லோரும் நம்பி இருந்தார்கள். ஆனால் நாம் தொடர்ச்சியாக அதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று அடித்துச் சொல்லி இருந்தோம். இப்போது எமது கருத்துக்கள் உறுதியாகி இருக்கின்றது.

அதன்படி முதலில் பொதுத் தேர்தலே நடக்க இருக்கின்றது. அது தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதி ரணிலும் ராஜபக்ஸாக்களும் ஏகமனதாக எடுத்து விட்டார்கள்.

தற்போது அமெரிக்காவில் இருக்கின்ற பசில் ராஜபக்ஸ வருகின்ற மார்ச் ஐந்தாம் திகதி (05.03.2024) எமிரெயிட் விமனாத்தில் காலை எட்டு முப்பது (8.30) மணிக்கு கடுநாயக்காவுக்கு வருகின்றார்.

அவரை மொட்டுக் கட்சியினர் பெரும் ஊர்வலமாக அழைத்து வர இருக்கின்றார்கள். அவர்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றார். அதன் பின்னர் தேர்தல் பற்றிய அறிப்பு வரும். இந்த முறை மஹிந்த ராஜபக்ஸ குருணாகலையில் போட்டியிட மாட்டார்.

தம்மிக்க பெரேரா கம்பஹவில்  களமிறங்குகின்றார். இது போன்ற பல பரபரப்பான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

 

Previous Story

சர்வதேச சாரணிய மா நாட்டில் ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி பங்கேற்பு!

Next Story

தடுமாறும் தனித்துவ தலைமைகள்!