–நஜீப்–
பேரின உணர்வை சந்தைப்படுத்தி பெருத்த அறுவடையுடன் அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ஸாக்களை கடவுள் கவிழத்து விட்டார் என்பது பொதுவான கதை. கோட்டா அதிகாரத்தை விட்டு ஓடிய நாள் முதல் இன்று வரை மொட்டுக் கட்சிக்குள் பல கோஸ்டிகள். அங்கே குழப்பமும் கலாட்டாவுமாக இருக்கின்றது.
என்னதான் அட்டகாசங்கள் உச்சம் தொட்டாலும் மஹிந்த ராஜபக்ஸ முன் அவை அனைத்தும் கதிரவன் பார்த்த பனிபோல் மறைவது வழமை. ஆனால் இப்போது இது வரம்பு மீறி போய்விட்டது என்றுதான் தெரிகின்றது.
தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு விசுவாசமான மொட்டு அணியில் செயலாற்றும் நிமல் லன்சா வார்த்தைகள் மார்பில் பாய்ந்த ஈட்டி போல் கொடூரமாக எமக்குத் தெரிகின்றது. உங்களுக்கு முதுகெழும்பு இருந்தால் 2024 அரசாங்கம் கொண்டு வருகின்ற வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து விட்டு தேர்தலுக்கு வாருங்கள் என்று அவர் தனது மொட்டு சகாக்களுக்கு சவால் விட்டிருக்கின்றார்.
இவரது இந்த வார்த்தைகளால் கொதித்துப் போன சில மொட்டு உறுப்பினர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடி;கைகள் தொடர்ப்பில் கலந்து பேச வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள். ஆபத்தை உணரும் மஹிந்த, தம்பி பசிலிடம் நிலமை கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கின்றது. இது ஆபத்தானது ஏதாவது செய்யுமாறு கேட்டதாக ஒரு தகவல் நமக்கு வருகின்றது.
நன்றி: 29.10.2023 ஞாயிறு தினக்குரல்