லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

பாடகி லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணங்கள் குறித்து வெளியாகியுள்ளது.

இந்திய திரைப்படம் மற்றும் இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் பிரபலங்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர் தனது 92வது அகவையில் நேற்று காலமானார்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைப்படும் லதா மங்கேஷ்கர், 36 இந்திய மொழிகளில் சுமார் 36,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது இவர் 12வயதில் அவரது தந்தை தவறிவிட்டதால் தனது தங்கை மற்றும் தம்பிகளை வளர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறு வயதிலேயே குடும்ப பொறுப்புகளை சுமந்து கடினமாக உழைத்து வந்துள்ளார்.

இரண்டாவது காரணம் இவர் ராஜ குடும்பத்தை சேர்ந்த பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ராஜ் சிங் துங்கர்பூர் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜ் சிங் தனது தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்று கூறப்படுகின்றது. இவர்களின் காதலுக்கு ராஜ் சிங்கின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தனது வாழ்நாள் முழுக்க திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று தெரிவித்ததோடு இறுதிவரை லதா மங்கேஷ்கருடன் நட்பாக பழகி வந்துள்ளார். லதா மங்கேஷ்கரும் இதே முடிவை எடுத்ததனால் தான் இறுதி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

Previous Story

கொரோனா தொற்றுக்குப் பின் சாப்பிட உகந்த உணவு?

Next Story

இலங்கை- தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது