றோ அமைப்பின் பாதுகாப்பில் மகிந்த!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணர்தன குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

எமக்கு கிடைத்த தகவலின்படி, மகிந்த ராஜபக்ச டோரா படகின் மூலமாக சர்வதேச எல்லையில் இந்தியாவின் றோ அமைப்பின் பாதுகாப்பில் இருப்பதாகவே எமக்கு கிடைத்த தகவல்களின் படி அறிய முடிகின்றது.

ஆனால் அவர் எந்த மாநிலத்தில் இருக்கின்றார் என்பதை எம்மால் அறிய முடியாமல் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுமே இவ்வாறு ஒன்றாக இருப்பதாக அறிய முடிகின்றது.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

கோட்டா-ரணில் அமைச்சரவையை             நியமிப்பதில் நெருக்கடி!

Next Story

காற்றோடு போன தேசப்பற்று!